Archive for May 2011
பாடல்கள் பலவிதம்_ என்னை வசீகரித்தவை...
வாசகர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். 'எப்பவும் கார், இல்லை ஏதாவது பொதுவான விஷயத்தை பற்றி சொல்லும் இவன் இப்போது திடீரென்று பாடல்கள் பக்கம் வருவது ஏன்?' என்று நினைப்பது உங்கள் கண் மூலமாக எனக்கு தெள்ள தெளிவாக தெரிகிறது.
எல்லோருக்கும் பொதுவாக சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பிடிக்கும். சில பாடல்களை கேட்டால் அவர்களுக்கே உரிய பழைய ஞாபகங்கள் தலைதூக்கும். சிலருக்கு இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களை கேட்கும்போது அவர்களின் இளமை காலம் ஞாபகத்திற்கு வந்து செல்லும். சிலருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களை கேட்டால் மெய்மறந்து போய்விடுவார்கள்.
சிலர் தனக்கு குறிப்பிட்ட இசையமைப்பாளரை தான் பிடிக்கும். எனவே அவர் இசையமைத்த பாடல்களை மட்டும்தான் கேட்பர்.
என்னுடைய பாலிசி என்னவென்றால் ஒரு பாடலில் இசை, வரிகள், படியவருடைய குரல் ஆகியவை நன்றாக இருக்குமேயானால் நான் அந்த பாடலுக்கு அடிமை. ஆனால் இந்த முடிவு எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு மாதத்தில் மாறிவிடும்! அப்போது புதிதாக வெளிவந்த பாடல்களின் வரிகளை என் வாய் முனுமுனுக்கும்.
சில பாடல்கள் என்னை மெய்மறக்க செய்துவிடும். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் என்னை கவரத் தவறுவதில்லை. எனவே எனக்கு பிடித்த பாடல்களை அவற்றின் வரிகளையும், அதில் எனக்கு பிடித்த வரிகளையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த படமான 'எங்கேயும் காதல்' என்ற திரைப்படத்தில் வரும் தீம் பாடலான 'எங்கேயும் காதல்' என்கிற பாடலை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.(எனக்கு பிடித்த வரிகளை ஹைலைட் செய்திருக்கிறேன்)
இசையமைப்பாளர்; ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்; ஆலாப் ராஜு, ராணினா ரெட்டி
பாடல் வரிகள்; கவிஞர் தாமரை
"எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே
கடற்கரையில் அதன் மணல் வெளியில்அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல் நிறங்களையோ
இது பார்க்காதே .. பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூச்செண்டால் பூமி திண்டாடும்
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே"
தகிக்கும் வெயிலும் வெளியூர் பயணமும்
அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாகிக்கொண்டிருப்பதை போலவே வெயிலின் தாக்கமும் தினம் தினம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வெயிலினால் விரைவில் நாம் சோர்ந்துபோகிறோம். அதிலும் வெளியூர் பயணங்கள் நம்மை மிகவும் வாட்டுகிறது.
பேருந்துகளில் செல்லும்போதுதான் அவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒருசில சொகுசு பேருந்துகளை தவிர அனைத்து பேருந்துகளிலும் 'ரெக்சின்' இருக்கைகள் தான் உள்ளது. இவை மேலும் எரிச்சலாக இருக்கும்.
எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...
வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்கள் அடர் நிறங்களான கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இந்த நிறங்கள் சூட்டை இழுத்துக்கொள்ளும். அதற்கு பதிலாக கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் நிறங்களான வெள்ளை, சில்வர், மெல்லிய நீல நிறம் ஆகியவை சிறந்தது.
எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...
- உங்களின் பயணத்திற்கான வழித்தடங்களை முழுவதுமாக முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள்.
- நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டிய அனுபவம் இருந்தாலொழிய நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டாதீர்கள். வாடகை ஓட்டுநர்கள் அமர்த்தி நீங்கள் சுகமாக செல்லுங்கள்.
- வெயில் காரில் ஏ.சி. உபயோகிக்கும்போது மினிமம் ஸ்பீடிலேயே உபயோகிங்கள்.
- வெயிலில் காரை பார்க் செய்துவிட்டு நீண்ட நேரம் கழித்து வந்தீர்களானால், காரின் ஜன்னல்களை திறந்துவிட்டு ஏ.சி. யை கொஞ்ச நேரத்திற்கு ஆன் செய்யுங்கள். இதனால் அதிகரித்த காரின் தட்பவெட்பம் சமமாகும். பிறகு ஜன்னல்களை மூடிவிட்டு ஏ.சி. யை ஆன் செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.
- முடிந்தவரை அடிக்கடி வழியில் தென்படும் இயற்கை பழச்சாறுகளை பருகுங்கள்.
- ஏ.சி. பயன்படுத்தினால் மைலேஜ் கணிசமாக குறையுமென்பதால், இரவில் செல்லும்போது ஏ.சி. யை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்துவிட்டு ஃபேன்களை பயன்படுத்துங்கள்.
வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...
- முடிந்தவரை 'டிராவல் ஏஜென்சி'களிடமிருந்தே வண்டியை எடுங்கள். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்வதோடு மட்டுமில்லாமல் தங்களால் வரமுடியாத சூழ்நிலைகளில் வேறு வண்டியை ஏற்பாடு செய்துவிடுவர்.
- உங்கள் குடும்பம் ஐந்து உறுப்பினர்களை கொண்டதாக வைத்துக்கொள்வோம். ஐந்து நபர்களுக்கு சரியாக இருக்கும் வண்டிகளை (அதாவது... இண்டிகா, அம்பாசிட்டர்...) எடுக்காமல் சற்று பெரிய காராக (அதாவது... சுமோ, இன்னோவா, டவேரா...) எடுங்கள்.
- வண்டியை புக் செய்யும்போதே ஏ.சி. வேண்டுமென்று சொல்லிவிடுங்கள். ஏ.சி. க்கு எவ்வுளவு பணம் அதிகமாக கொடுக்கவேண்டுமென்பதையும் முன்பே பேசிவிடுங்கள்.
புதிதாக கார் வாங்குபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்கள் அடர் நிறங்களான கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இந்த நிறங்கள் சூட்டை இழுத்துக்கொள்ளும். அதற்கு பதிலாக கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் நிறங்களான வெள்ளை, சில்வர், மெல்லிய நீல நிறம் ஆகியவை சிறந்தது.