Archive for March 2011

காசேதான் கடவுளடா





     ண்டமாற்று முறைக்கு மாற்று வழியாக வந்த பணம் இன்று உலகத்தையே ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் தமிழகத்தில் எந்த மு.க.  வெற்றிவாகை (!)  சூடினாலும்  பணம்தான்  ஆட்சி செய்யப்போகிறது என்பது   நம் அனைவருக்கும் தெரியும்.  எனவே பணத்தை  சேமிக்கவேண்டும் என்று தான் அனைவரும்   விருப்பபடுவர். 

சில பேர் சேமிக்க வேண்டிய காலத்தில் சேமிப்பின் அவசியத்தை உணராமல்  பின் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தாங்கள் சேமிக்கவில்லை என்று  வருத்தபடுவர்.

இன்றும் 'பட்ஜெட் பத்மநாபன்' போல் வாழும் ஒருவரைப் பற்றி என் அப்பா கூறியிருந்தார்.அவர் பெயர் (எதுக்கு இந்த வம்பு???). 'மிஸ்டர் எக்ஸ்' ன்னு  வச்சிக்குவோம்.  மிஸ்டர் எக்ஸ் எங்கள்  அப்பா  வேலைசெய்யும்  நிறுவனத்தில் வேலை  செய்கிறார்.  வீட்டிலுள்ள  நாலு  பேருக்கும் மொத்தமாக  மளிகை பொருள் மாதம் ரூ.500/- க்கு  மட்டும்  தான்  வாங்குவார்!  சந்தைக்கு  சென்றால்  காய்கறிகளை  நூறு  கிராம்'க்கு  வாங்கும்  ஒரே நபர் அவர்தான்!

இன்னொருவர் அதற்கு பத்து மடங்கு மளிகை பொருள்  வாங்குகிறார்!  தினசரி  கிலோ கணக்கில் காய்கறி தேவைப்படுகிறது.

நாம் இதுபோல கஞ்சமாகவும் இருக்கவேண்டாம் அதிக செலவாளியாகவும்  இருக்கவேண்டாம். சிக்கனம் என்பது நம்மால் முடிந்தவற்றில்  செய்யவேண்டுமே தவிர முடிந்தவரை செய்யக்கூடாது.

இன்று நம்மில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனம்(கள்)  வைத்திருக்கிறோம்.  தினமும் அதற்கு போடும் பெட்ரோல்'ஐ சேமித்தால் நம்  பட்ஜெட்டில்  பெரிய  தொகை சேமிக்கலாம். எனவே  அதற்குரிய  வழிகளை  தற்போது  உங்களுக்கு  சொல்கிறேன்;

>> உங்கள் வாகனத்தை முறையாக சர்விஸ் செய்யுங்கள்.

>> பெரும் நகரங்களில் வாழுபவர்கள் உங்கள் திட்டமிட்டு துவங்கினால்  சிக்னலில் மாட்டாமல்  தப்பிக்கலாம்.  அப்படி  சிக்னலில்  மாட்டிக்கொண்டால்  இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள்.

>> ஏர் பில்டரை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட இடைவேளையில் ஆயிலை மாற்றுங்கள்.

>> பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு முடிந்தவரை மிதிவண்டியில் போவதுதான்  உத்தமம்.

>> சிக்னலில் நிற்கும்போது கடுப்பாக ஆக்ஸிலேட்டரை முறுக்காதீர்கள்!

>> முடிந்தவரை 40-50 கி.மீ. வேகத்திலே செல்லுங்கள். இது உங்கள் பர்சுக்கும் உங்களுக்கும் நல்லது!

>> பெட்ரோல் போடும்போது அப்படியே அங்கேயே ஏர் செக் பண்ணிருங்க.

>> பேட்டரி மற்றும் ஸ்பார்க் ப்ளக் சரியா வேலைசெய்யுதா'ன்னு அடிக்கடி செக்  பண்ணுங்க.

>> நண்பர்களுடன் வெளியே செல்லும்போது வெவ்வேறு வண்டிகளில்  போகாமல் சேர்ந்து போங்கள்.

>> உங்கள் வண்டி மேனுவலில் குறிப்பிட்ட எடைக்கு தாண்டி வண்டியில்  ஏற்றாதீர்கள். இதனால் வண்டியும் சீக்கிரமாக தேய்ந்துவிடும்.

---------------------------------------------------------------------------------------------------------
பரிசுப் போட்டி!

"அப்பாடி... இப்ப நான் ஃப்ரீயா  இருக்கேன்!".

 என்ன  காரணமென்று  எனக்கு   சரியாக மின்னஞ்சல்  (mynameissibhi@yahoo.com)  அனுப்புபவருக்கு இலவசமாக சுஜாதாவின்  'கற்றதும்  பெற்றதும்'   அளிக்கப்படும்! முந்துங்கள்! இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

---------------------------------------------------------------------------------------------------------

என் நண்பர் ஒருவர் வலைப்பூ ஆரம்பிக்க ஆலோசனை கேட்டார்.  அப்போதுதான் 
பிரபல பதிவராவது எப்படி? -நிறைவுப் பகுதி  என்ற பதிவை இடுகையிட்டேன். எனவே அவருக்கு சில உதவிகளை செய்யமுடிந்தது. அவரது இரண்டாவது  பதிவிலே   பிரபலமாகிவிட்டார்! அவரை என் அடுத்த பதிவில் உங்களுக்கு  அறிமுகபடுத்த விழைகிறேன். இருந்தாலும் அவருடைய  வலைப்பூவை நீங்கள்  வாசிக்குமாறு  தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
அவருடைய வலைப்பூவின் முகவரி- http://1hourcom.blogspot.com/

---------------------------------------------------------------------------------------------------------
Saturday, March 26
Posted by Sibhi Kumar SenthilKumar

பிரபல பதிவராவது எப்படி? -நிறைவுப் பகுதி

பாகம் ஒன்றை காண க்ளிக் செய்யவும்-பிரபல பதிவராவது எப்படி? பாகம் 1
---------------------------------------------------------------------------------------------------

பின்னூட்டங்கள்;

பதிவர்கள் பெரும்பாலும் தங்கள் வலைப்பூவில் பதிவிடுவது மட்டுமல்லாமல் பிற வலைப்பூக்களையும் வாசிப்பார்கள். பிடித்திருந்தால் வோட்டு போடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பின்னூட்டத்தை போடுவதால் அந்த பதிவருக்கு ஊக்கம் கொடுத்தது போல் இருக்கும். பின்னூட்டத்தை ஒரே வரியில், அதாவது 'நல்ல பதிவு', 'அருமையான பதிவு' , என்று போடவேண்டாம். அந்த பதிவில் உங்களுக்கு பிடித்த வரி ஆகியவற்றை குறிப்பிட்டு போட்டால் உங்களை பற்றியான மதிப்பு உயரும்.
ஏதேனும் தவறுகள் மற்றும் திருத்தங்களை பின்னூட்டத்தில் சொல்ல விரும்பினால் 'வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை'ப்போல சொல்லவேண்டும். இதனால் பதிவர்களிடையே தேவையில்லாத மனக்கசப்பு ஏற்படாது.

விளம்பரம்;

அனைவருக்கும் தங்களின் வலைப்பூ மூலம் பணம் சம்பாதிக்க விருப்பம் இல்லாமலா இருக்கும்?

கூகிள் ஆட்சென்ஸ் (Adsence) ஒரு நல்ல வழி. இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அதைப்பற்றி சொல்கிறேன்.

உங்களின் பிளாக்கர் கணக்கில் உள்நுழையவும். பின் 'Monitize' என்கிற பகுதியிற்கு செல்லவும். அங்கே, கீழ் உள்ளதுபோல செய்யவும்.

சரியாக தெரியவில்லை என்றால் படத்தை க்ளிக் செய்யவும்.

அதற்கு பின் அது காட்டிய வழியில் செல்லவும். நிறைய பேருக்கு 'ஆட்சென்ஸ்' சரியாக வேலைசெய்யாது.

இந்த வசதியை நிறைய வலைத்தளங்கள் செய்கின்றது. அதில் குறிப்பிடத்தக்கது Admaya .

டிஸ்கி: உங்கள் வலைப்பூவில் விளம்பரம் போடுவது மட்டுமல்லாமல் பிற வலைப்பூவிலுள்ள விளம்பரங்களையும் சும்மாவாச்சும் க்ளிக் செய்யுங்கள்!

காணொளிகள்;

நிறையப் பேர் தங்கள் அலுவலகங்களில்தான் வலைப்பூ பார்க்கிறார்கள். சில பேர் தங்கள் வீட்டில் பார்க்கிறார்கள். எனவே காணொளிகளை பப்ளிஷ் செய்யாமல் அதன் லிங்க்'ஐ கொடுங்கள்.
(எ.கா. இதையும் பாருங்கள்- http://www.youtube.com/watch?v=wNyHE__TdJA )

பதிவுகள்;

என்னதான் நாம் தொழில்நுட்பரீதியாகவும் பின்னோட்டம் போடுவதிலும்  ராஜாவாக  இருந்தாலும்  நம்மிடம்  உள்ள  சரக்கை  (விஷயத்த சொன்னேன்!!!)  வைத்துதான் நம்முடைய வலைப்பூவிற்கு வரவேற்ப்பு இருக்கும்.

முடிந்தவரை ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் மட்டும் போடுங்கள். உங்கள் வாசகர்களுக்கு போதுமான இடைவெளி கொடுங்கள். உங்கள் பதிவை பப்ளிஷ் செய்யும்முன் ஒருமுறை படித்து பாருங்கள். உங்களுக்கு முழு திருப்தியை அளித்தால் மட்டுமே பப்ளிஷ் செய்யுங்கள்.

உங்களுக்கு வேலை பளு அதிமாக இருந்தால் அப்புறம் போட்டு கொள்ளலாம் என்று பேசாமல் இருந்துவிடுங்கள். ஏதாவது ஒரு பதிவை கண்டிப்பாக போடவேண்டுமென்ற அவசியமில்லை.

உங்கள் பதிவுகளின் தலைப்பை சுவையாக வையுங்கள்.

'சைடுபார்', 'ஃபூட்டர்' என்று அனைத்து இடங்களிலும் உங்கள் படைப்புகளை வெளியிடாதீர்கள். வாசகர்களை அது சலிப்புற செய்யும். முடிந்தவரை நிறைய விட்ஜெட்'களையும் வைக்காதீர்கள்.

இவையனைத்துமே நம்மால் முடிந்த காரியங்கள் தான். எனவே வருகிறேன் பிரபல பதிவரே!

டிஸ்கி: அடர்த்தியான கலரில் டெம்ப்ளேட்'ஐ வைக்காதீர்கள்.
Monday, March 14
Posted by Sibhi Kumar SenthilKumar

பிரபல பதிவராவது எப்படி?


     வலையுலகம் என்பது எல்லையற்றது. இன்று வலைப்பூ அனைவருக்கும் சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்ட மாற்றமிது. அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு புத்தகமாகவும், அசத்தல் எழுத்தாளர்களுக்கு ஒரு ஆவணமாகவும், வெளிநாட்டில்  வாழும்  தமிழர்களுக்கு ஒரு குடும்பமாகவும் வலைப்பூ பங்காற்றுகிறது.

அனைத்து பதிவர்களுக்கும் தாங்கள் பிரபல பதிவராக வேண்டுமென்பது இயல்பான ஆசை. எனவே ஒரு மூலையில் உட்கார்ந்து நான் யோசித்து பார்த்ததில் கீழ்கண்ட யோசனைகள் எனக்கு வந்தது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

டெம்ப்ளேட்;

பல்சுவை பதிவெழுதுபவர்கள் பிளாக்கர் அளித்துள்ள 'template designer' ஐ பயன்படுத்துங்கள். அதுப்போல மாதத்திற்கு ஒரு முறையாவது டெம்ப்ளேட்'ஐ மாத்துங்கள். இந்த யுக்தி உங்களது வாசகர்களை கவர்ந்திழுக்கும்.

ஒரு துறையைப் பற்றி பதிவெழுதுபவர்கள், (எ.கா. இலக்கியம், அரசியல், சினிமா, சமையல், etc...) தங்களுடைய  முத்திரையாக  ஒரே  டெம்ப்ளேட்'ஐ  வைத்திருங்கள். இதற்கு பிளாக்கர் அளித்துள்ள  டெம்ப்ளேட்'ஐ  பயன்படுத்தாமல்  மற்ற  வலைத்தளங்கள்  அளிக்கும்  டெம்ப்ளேட்'ஐ  பயன்படுத்தினால் தனித்துவமாக இருக்கும்.

தொழில்நுட்பம்;

உங்களுடைய வலைப்பூவில் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் 
புகுத்துங்கள். இதற்கென்று  நீங்கள்  எல்லா  வலைதளங்களுக்கு  செல்ல  தேவையில்லை. எளிய தமிழில் அனைவருக்கும்  புரியும்படி  பதிவர்  சசிக்குமார்  அவர்கள் தனது வலைப்பூவான 'வந்தேமாதரத்தில்' எழுதிகொண்டிருக்கிறார். 
அவருடைய வலைப்பூவை தவறாமல் பின்தொடர்ந்து உங்கள் வலைப்பூவை
 மிளிர வையுங்கள்.

திரட்டிகள்;

தமிழில் தற்போது திரட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இன்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ் 10 என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே உங்களது பதிவுகளை மறக்காமல் அவற்றில் இணைக்கவும். குறைந்தபட்சமாக இரண்டு திரட்டிகளிலாவது இணையுங்கள்.

இணைத்ததொடு நின்று விடாமல் அவற்றின் 'வோட்டு பட்டையை' உங்கள் வலைப்பூவில் அமைத்துவிடுங்கள். நான் இப்போது இன்ட்லி, தமிழ் 10 , உலவு ஆகிவற்றின் ஒட்டு பட்டையை எவ்வாறு இணைப்பது என்று  சொல்கிறேன்.

உங்கள் வலைப்பூவின் டேஷ்போர்டிற்கு சென்று design 'க்கு செல்லவும். மறக்காமல் Expand Widget Templates என்பதை சொடுக்குங்கள்.

பின் கீழ்கண்ட கோடிங்கை Ctrl+F கொடுத்து தேடவும்.
<data:post.body/>

பிறகு கண்டுபிடித்த கோடிங்'ஐ கீழே/பின்னே  கீழ்கண்ட கோடிங்'ஐ paste  செய்யவும்.

<div>
<script type='text/javascript'> button=&quot;veri&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
<script type='text/javascript'>
submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>
<script type='text/javascript'>
submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>

<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>

<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</div>

பின்னூட்டங்கள்;
அடுத்த பகுதியை காண க்ளிக் செய்யுங்கள்- http://sibhikumar.blogspot.com/2011/03/blog-post_14.html
Friday, March 11
Posted by Sibhi Kumar SenthilKumar

எழுத்தாளர் சுஜாதா விருதுகள் 2011



     தமிழின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 'ம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ரூ.10 ஆயிரம் பரிசும் பாராட்டு பத்திரமும் கொண்டது. பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
  1. சுஜாதா சிறுகதை விருது -சிறந்த சிறுகதை தொகுப்பிற்கு  
  2. சுஜாதா நாவல் விருது -சிறந்த நாவலுக்கு
  3. சுஜாதா கவிதை விருது -சிறந்த கவிதை தொகுப்பிற்கு
  4. சுஜாதா உரைநடை விருது -சிறந்த கட்டுரை தொகுப்பிற்கு
  5. சுஜாதா இணைய விருது -சிறந்த வலைப்பூ(blog) , இணைய இதழ்
  6. சுஜாதா சிற்றிதழ் விருது -சிறந்த சிறுபத்திரிக்கைக்கு
விதிமுறைகள்;
 >> முதல் நான்கு பிரிவுகளில் 2009 டிசம்பர் முதல் 2010  டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 3 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். நூலாசிரியரைப்பற்றி தகவல்கள் மற்றும் முகவரியை தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும்.

>> ஐந்தாவது பிரிவில் தமிழில் சிறந்த வலைப்பூ (அல்லது) இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த வலைப்பூவை (அல்லது) இணையதளத்தை நடத்துபவர்கள் தம்மையும் தமது பதிவுகளைப் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த ஆக்கங்களின் பத்து சுட்டிகளையும்(link) மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். முகவரி- sujathaaawards@gmail.com

>> ஆறாவது பிரிவில் தமிழில் 2010 'ம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களின் பிரதிகளை அனுப்பவேண்டும். அந்த ஆண்டு குறைந்தபட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்கவேண்டும். அந்த ஆண்டு வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 3 பிரதிகள் வீதம் அனுப்பவேண்டும்.

>> விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படும்.

>> தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி- மார்ச் 20, 2011

>> விருதுகள் மே 3 'ம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி...

சுஜாதா விருதுகள், உயிர்மை,
11 /29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை-600018 

மின்னஞ்சல் முகவரி- sujaathaawards@gmail.com 
தொலைபேசி- 044-24-993-448 
--------------------------------------------------------------------------------------------------------------
Monday, March 7
Posted by Sibhi Kumar SenthilKumar

TVS Apache RTR 180 ABS - ஓர் அறிமுகம்

பாதுகாப்பு அம்சங்களில் 'சீட் பெல்ட்' , 'காற்றுப்பை'  போன்ற  உபகரணங்கள்  எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு முக்கியம் எ.பி.எஸ் (ABS). இந்தியாவில்  எ.பி.எஸ்  என்னும்  தொழில்நுட்பம்  கார்களில்  மட்டும்  தான்  உபயோகித்து  கொண்டிருந்தனர். வெளிநாட்டிலும் ரேஸ் பைக்குகளிலும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளிலும் தான் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் டி.வி.எஸ் புதுமையாக ஒரு சிறிய  பைக்கில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.

'அப்பாச்சி' அனைவரும் விரும்பும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக். கண்ணை  கவரும்  தோற்றமும் குறைவான விலையும் இதனை வெற்றிப்பெற செய்தது. இதனால் சுமார் இரண்டரை இலட்சம் 'அப்பாச்சி'கள் இந்தியாவெங்கும் விற்பனையாகியுள்ளது.
 
எ.பி.எஸ் என்ற தொழில்நுட்பத்தின் பயன் என்ன?   
   
      எ.பி.எஸ் (Antilock Braking System) என்ற தொழில்நுட்பத்தை வண்டியின் பிரேக்குகளில் பொருத்துவார்கள். வழுக்கும் தரைகளிலோ சரிவான மலைச்சரிவுகளிலோ சாதாரண பிரேக்குகளை உபயோகித்தால், நாம் சறுக்கி விழுந்துவிடுவோம்.

சரியாக சொல்லவேண்டுமென்றால், வண்டியின் பிரேக்குகளில் ஒரு சென்சார் பொருத்தபட்டிருக்கும். நாம் பிரேக்குகளை உபயோகிக்கும்பொழுது பாதைக்கு ஏற்ற மாதிரி வண்டியை நிறுத்தும்.
      புதிய 'அப்பாச்சி' தோற்றத்தில் வித்தியாசங்கள் இருக்காது. ஒரு ஓரத்தில் ABS என்ற முத்திரை இருக்கும். வேண்டுமென்றால் நாம் எ.பி.எஸ் ஐ ஆஃப் கூட செய்துகொள்ள ஒரு பொத்தான் அளிக்கப்பட்டிருகிறது.

புதிய 'அப்பாச்சி' மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் எண்ணத்தில் டி.வி.எஸ் உள்ளது. சாதாரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கும் மணல் நமக்கு எமனாகும் தருணத்தை இந்த தொழில்நுட்பம் முற்றிலும் தகர்த்தெறிகிறது. இதனுடைய விலையினை பற்றி என்னும் அறிவிக்கப்படவில்லை. வெளிவந்த பிறகு இதன் விலையுடன் நாம் கலந்தாலோசிப்போம்.

கீழ் கண்ட வீடியோவை பார்த்தால் உங்கள் சந்தேகங்கள் தீரும்...

Wednesday, March 2
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -